முகப்பு

தலாக்கும் அநியாயமும்

அடுத்து வரும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மீது இழைக்கப்படும் இரண்டு வகையான அநீதியைக் குறித்துப் பேசுகின்றன. உண்மையில் அது ஆண்கள் தங்களுக்கு எதிராகவே செய்து கொள்ளும் அநீதி. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள்.   وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ

இலக்கை நோக்கிய பாதை

அதிகப்படியான செய்திகள் நம்மை பெரும் குழப்பத்திலும் கடும் மனச்சோர்விலும் ஆழ்த்தும். எந்த அளவு நாம் நம்முடைய வாழ்க்கையை சிறியதாக அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் நிம்மதியாக இருக்கலாம். தொடர்ந்து உலகச் செய்திகள் முதற்கொண்டு உள்ளூர் செய்திகள்வரை அறிந்து கொண்டு அலசுபவர்கள் அச்சுறுத்தும் எதிர்மறை மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். ஏனெனில்

தலாக் தொடர்பான சட்டங்கள்

மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து விலகியிருப்பது தலாக்கின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அடுத்தடுத்த வசனங்கள் தலாக் தொடர்பான சட்டங்களைப் பேசுகின்றன.  وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ

உங்களுக்காக சேர்த்து வையுங்கள்

திருமணம் தொடர்பான பேச்சு தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது. அந்தப் பதிலின்மூலம் சமூகத்தில் அது தொடர்பாகப் பரவியிருந்த பிழையான நம்பிக்கைகள் நீக்கப்படுகின்றன. அடுத்தடுத்த வசனங்களில் இடம்பெறப் போகும் விவகாரத்து தொடர்பான விசயங்களுக்கும் அந்தப் பதில் அவசியமானதாக இருக்கிறது.    وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ

மனச்சிக்கலுக்கான ஓர் எளிய தீர்வு

மனதில் நேர்மறையானவை, எதிர்மறையானவை என ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. வருகின்ற எண்ணங்களை புறக்கணிப்பதும் அவற்றை நீடிக்கச் செய்வதும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை நீடிக்கச் செய்ய வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது.

மதுவும் சூதாட்டமும்

உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தல், செலவு செய்வது தொடர்பான இந்தப் பின்னணியில் மதுவும் சூதாட்டமும் குறித்த கேள்வி இடம்பெறுவது கவனிக்கத்தக்கது. மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “இன்று மதுவும் சூதாட்டமும் முழுக்க முழுக்க தீமையின் கூறுகளையே கொண்டிருப்பதுபோல அன்றைய அறபுக் கலாச்சாரத்தில் அவை முழுக்க முழுக்க தீமையின் கூறுகளை

நீங்கள் விரும்பாவிட்டாலும்

உலகியல்வாதிகள் அவ்வளவு எளிதாக தங்களின் செல்வங்களை மற்றவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்வங்களை சேகரித்துக் கொண்டே செல்வார்கள். இதுதான் சமூகத்தைவிட்டு அவர்களை துண்டிக்கிறது. அவர்கள் சமூகத்தை ஒரு குடும்பமாக எண்ண மாட்டார்கள். தங்களின் நலன்களைத் தவிர மற்றவர்களின் நலன்களை பொருட்படுத்த மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.

தூதுத்துவ வரலாறு

நிராகரிப்பாளர்களின், நயவஞ்சர்களின் கேலியைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் முரண்பாட்டில் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரைகல் எதுவும் இல்லை. அவர்கள் நேர்வழியில் செல்லாமல் பல்வேறு வழிகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நேரான வழியைக் காட்டியிருக்கிறான். எவ்விதத் தயக்கமும் தடுமாற்றமும் இன்றி அந்தப் பாதையில் செல்லுங்கள்.

இஸ்லாம் என்னும் மகத்தான அருட்கொடை

அடுத்து வரும் வசனங்கள் நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமான பொதுவான அழைப்பைக் கொண்டிருந்தாலும் நயவஞ்சகர்கள், நம்பிக்கையில் பலவீனமானவர்களுக்கான தனித்துவமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. தெளிவான சான்றுகளோடு முன்வைக்கப்படும் இந்த அழைப்பைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் அவை எச்சரிக்கின்றன. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا

சுதந்திரமானவர்களா? அல்லது அடிமைகளா?

அதிகப்படியான சுதந்திரம், பெரும் செல்வம், அதிகாரம் ஆகியவை நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது இலகுவானது. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான சூழல் நம்மை தவறான திசைகளின் பக்கம் தள்ளுகிறது. மனிதர்கள் உள்ளுக்குள் கட்டுப்பாடுகளை விரும்புவது இதனால்தான்.