வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது. அன்றாடம் செய்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். பிறகு என்ன இருக்கிறது வாழ்வதற்கு? இந்த எண்ணம் ஆரம்பத்தில் உங்களுக்கு உருவாகி இருக்காது என்று கருதுகிறேன். சாப்பிடுவது, வேலைக்குச் செல்வது, விளையாடுவது, பொழுது போக்குவது, தூங்குவது என அத்தனை வேலைகளிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கும்
இந்த இடத்தில் யூதர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்கு பதிலளிக்கப்படுகிறது. கொசு, ஈ, சிலந்திப்பூச்சி போன்ற அற்பமான உயிரினங்களைக் கொண்டா அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான் என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்பினார்கள். அவர்களின் நோக்கம், திருக்குர்ஆனுடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்புவதுதான். إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا
மற்றவர்கள் எரிச்சலடைவார்கள் என்று தெரிந்தும் நாம் பெருமையடிக்கிறோம். மற்றவர்கள் அடிக்கும் பெருமை நமக்கு எரிச்சலூட்டினாலும் நாமும் அதைப் போலவே பெருமையடிக்கிறோம். இது நாம் செய்யும் தவறுகளை நாம் உணராமலில்லை என்பதையே காட்டுகிறது. நாம் பொய்யான வாதங்களை மீண்டும் மீண்டும் முன்வைப்பதன்மூலம் அவற்றை உண்மையென நம்ப ஆரம்பிக்கின்றோம். நம் பார்வையில்
இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்கள், அந்த அழைப்பை ஏற்க மறுத்த மூர்க்கமான நிராகரிப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற்றமான நிலையில் இருந்த நிராகரிப்பாளர்கள் என மூன்று தரப்பினரையும் அடையாளப்படுத்திய பிறகு அவர்களும் ஏனைய இணைவைப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். அடுத்து வரக்கூடிய
நிராகரிப்பாளர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மூர்க்கமான நிராகரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் அதுதான் இணக்கத்திற்கான வழி என்றும் அவர்கள் கூறுவார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் காணப்படுவார்கள்.
நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம். மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின் ஆரம்ப கட்டம் மன அழுத்தத்திலிருந்து அல்லது
நம்பிக்கையாளர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் குறித்து தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்? அவர்களின் விசயத்தில் செயல்படும் இறைநியதி என்ன? அடுத்த இரு வசனங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன. إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ
அல்பகரா அல்பகரா என்றால் பசுமாடு என்று பொருள். இந்த அத்தியாயத்தில் இஸ்ரவேல் சமூகத்தில் நிகழ்ந்த பசுமாட்டைக் குறித்த ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. அந்தச் சம்பவம் அத்தியாயத்தின் மையக்கருத்துகளைத் தெளிவுபடுத்துவதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது மதீனாவில் அருளப்பட்ட மிக நீளமான அத்தியாயமாகும். ஹிஜ்ரத்திற்கு
நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு தூரமாகி விடுவான். இதுதான் நம்பிக்கையாளர்களையும்
உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது சாத்தியமாகிறது. உள்ளுணர்வுகள் கடத்தப்படுகின்றன. எப்படி அவை